×

மெரினா கடலில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

சென்னை: மெரினா கடற்கரையில் நேற்று வழக்கத்தைவிட பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கலங்கரை விளக்கம் -பட்டினப்பாக்கம் பகுதிக்கு இடையே 12 பேர் கடலில் குளித்தனர். திடீரென வந்த ராட்சத அலையில் 3 வாலிபர்கள் சிக்கினர். இதை பார்த்த பொதுமக்கள் மெரினா உயிர்காக்கும் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே வந்த மீட்பு குழுவினர் மற்றும் மீனவர்கள், அலையில் சிக்கிய 3 பேரில், 2 பேரை உயிருடன் மீட்டனர். ஒரு வாலிபரை சிறிது நேரம் கழித்து இறந்த நிலையில் மீட்டனர். பட்டினப்பாக்கம் போலீசார் விசாரணையில், உயிரிழந்த வாலிபர் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த சிவா (23) என்றும், விடுமுறைக்கு நண்பர்கள் 12 பேருடன் சென்னை வந்ததும் நேற்று மெரினா கடற்கரைக்கு வந்து கடலில் நண்பர்களுடன் குறித்த போது அலையில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. பிறகு சிவாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

The post மெரினா கடலில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Marina ,CHENNAI ,Marina Beach ,Pattinapakkam ,
× RELATED கடலில் பிளாஸ்டிக், ரசாயனம் கலப்பதை தடுக்க விழிப்புணர்வு படகு பயணம்